இரண்டு தலைகள்…மூன்று கைகள்…ஒரே இதயம்: அரிதாக பிறந்த குழந்தை!

 

இரண்டு தலைகள்…மூன்று கைகள்…ஒரே இதயம்: அரிதாக பிறந்த குழந்தை!

பாபிதா என்ற பெண்ணுக்கும் கடந்த  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஹிர்வார். இவருக்கும் பாபிதா என்ற பெண்ணுக்கும் கடந்த  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து கர்ப்பமான பாபிதாவுக்கு நேற்று  பிரசவவலி ஏற்பட்டதால் அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு இரண்டு தலைகளும், மூன்று கைகளும் இருக்கின்றன.

tn

இதுகுறித்து கூறும் மருத்துவர்கள், குழந்தைக்கு இரண்டு தலைகளும், மூன்று கைகளும் இருக்கின்றன.ஆனால்  இதயம் ஒன்று தான் உள்ளது. இப்படி ஒரு குழந்தை பிறப்பது மிகவும் அரிதானது.

ttn

தற்போது குழந்தையைத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறோம். அதே போல் குழந்தையின் தாயும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றனர்.   இரண்டு தலைகளும், மூன்று கைகளும் கொண்ட குழந்தை பிறந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.