இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கை இருக்கக்கூடாது: பாஜக எம்பி அனந்த் குமார்

 

இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கை இருக்கக்கூடாது: பாஜக எம்பி அனந்த் குமார்

இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கை இருக்கக்கூடாது என பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

குடகு: இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கை இருக்கக்கூடாது என பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக எம்பி அனந்த் குமார் சர்ச்சை கருத்துகளுக்கு பேர்போனவர். சமீபத்தில் இரண்டு பெண்கள் சபரிமலை சென்றபோது, இந்த செயல் இந்து மக்களை பகல் வெளிச்சத்தில் வன்புணர்வு செய்ததற்கு சமம் என்ற சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் குடகு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நம்மை சுற்றி நடப்பதை புரிந்துகொண்டால் நம் அடிப்படை சிந்தனையில் மாற்றம் ஏற்படும் என பேசினார்.

மேலும் மத உணர்வு குறித்து பேசிய அவர், இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கை இருக்கக்கூடாது என வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.