ஆற்றில் கவிழ்ந்த கார்: 5 மாத குழந்தையை காப்பாற்ற தூக்கி வீசிய நபர்; பரபரப்பு காட்சி!
குழந்தையை காப்பாற்றும் நோக்கோடு பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் குழந்தையை தூக்கி வீசினார்
மத்திய பிரதேசம் : ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்த குழந்தையை காப்பாற்ற 5 மாத குழந்தை காப்பாற்ற தூக்கி வீசும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் டிக்கமர் மாவட்டத்தில் பாலத்தின் மீது 5 பேர் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த ஆட்டோ மீது மோதி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. காரில் இருந்த ஒருவர் கதவு வழியாக வெளியே வந்த அதிலிருந்த 5 மாத குழந்தையை மீட்டுள்ளார். அப்போது லாவகமாக காரின் பக்கவாட்டில் நின்ற அவர், குழந்தையை காப்பாற்றும் நோக்கோடு பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் குழந்தையை தூக்கி வீசினார். அப்போது எதிர்பாராத விதமாகக் குழந்தை ஆற்றுக்குள் விழுந்துள்ளது. உடனே பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த ஒருவர் ஆற்றுக்குள் குதித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
#WATCH Madhya Pradesh: A car carrying 5 people lost its balance, while trying to avoid hitting an autorickshaw, and fell into a river in Orchha town of Niwari district today. All the five occupants of the car were later rescued and sent to a hospital. (Source: CCTV footage) pic.twitter.com/TF8uTDBmWG
— ANI (@ANI) October 28, 2019
இதையடுத்து காரில் இருந்த மற்ற நபர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.