அதிகளவு பதுக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சி தரும் தகவல்!

 

அதிகளவு பதுக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சி தரும் தகவல்!

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்ட பணங்களில் பாதியளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் கைப்பற்றப்பட்டதாம். இதுகுறித்து வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின் படி, கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, சுமார் 3,291 மில்லியன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள்  புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 6,582 பில்லியன் ஆகும்.

money

2017-18 நிதியாண்டில் 5 கோடி ரூபாய்க்கும் 67.91%  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கணக்கில் வராமல் கைப்பற்றப்பட்டன. 2018-19நடப்பு நிதியாண்டில் இது  65.93சதவீதமாகக் குறைந்துள்ளது. 

money

முன்னதாக முன்னாள் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் எஸ்.சி.கார்க் மதில்லையா அரசின் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் மூலம் பணப்புழக்கம் அதிகமாகவில்லை. அது அதிகளவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. எனவே அதைத் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.