தசரா ஊர்வலத்தில் அதிவேகமாக நுழைந்த கார்; இளைஞர் பரிதாப மரணம்...20 பேர் படுகாயம்!

 
jashpur

ஜாஷ்பூரில் தசரா பண்டிகை ஊர்வலத்தில் திடீரென கார் நுழைந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் என்ற இடத்தில் தசரா பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் ஒரு பகுதியாக பக்தர்கள் ஊர்வலமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் கவுரவ் அகர்வால்(21) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  20 பேர் படுகாயமடைந்தனர்.

jashpur

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவில் இருக்கும் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், ஜாஷ்பூரில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.