மின்சார ஷாக் வைத்து கணவரை கொன்ற மனைவி! சடலத்தை ஆட்டோவில் கொண்டு சென்று புதைக்க முயற்சி
ஐதராபாத்தில் கணவருக்கு மின்சாரம் ஷாக் வைத்து கொன்று இரவில் சடலத்தை ஆட்டோவில் கொண்டு சென்று புதைக்க முயற்சித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பாப்பண்ணபேட்டை மண்டலத்தில் உள்ள பாத்தலிங்கயப்பள்ளியைச் சேர்ந்த பெய்னி சைலு (45), 20 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (42) என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஸ்வேதா (17) என்ற மகளும், பன்னி (14) என்ற மகனும் உள்ளனர். தம்பதியினருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகாததால், சைலு தனது குழந்தைகளுடன் பாத்தலிங்கயப்பள்ளியில் வசித்து வந்தார். கிராமத்தில் இருப்பது பிடிக்காத கவிதா, ஐதராபாத்திற்கு வந்து தனது தங்கை ஜோதி மற்றும் மூத்த சகோதரி மல்லேஷ் ஆகியோருடன் மித்ரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கவிதாவிற்கு தோன்றும் போதெல்லாம் ஊருக்குச் சென்று கணவனுடனும் குழந்தைகளுடனும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து மீண்டும் ஐதராபாத் வருவார்.
இந்த நிலையில் சமீபத்தில், நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது, அவர்கள் ஒன்றாக இருக்க முடிவு செய்தனர். 12 ஆம் தேதி சைலு தனது மனைவி கவிதாவுடன் ஐதராபாத் மித்ரா ஹில்ஸ்க்கு வந்தார். 18 ஆம் தேதி இரவு, சைலு, கவிதா, ஜோதி, மல்லேஷ் ஆகியோர் ஒன்றாக கள் குடித்தனர். அந்த நேரத்தில், சைலுவுக்கும் கவிதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் கவிதா, தனது தங்கையின் உதவியுடன், தனது கணவரை மின்சார ஷாக் கொடுத்து கொல்ல முயன்றார். இருப்பினும் அவர் இறக்காததால் அவர்கள் இருவரும் அவரது கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றி இறுக்கி கொலை செய்தனர். அதே நாளில் நள்ளிரவு 12 மணியளவில், கவிதா தனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து, உடலை எடுத்துச் சென்று, பழைய லிங்கயப்பள்ளி கிராமத்தின் புறநகரில் அடக்கம் செய்ய முயன்றார். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஏன் உடலை அடக்கம் செய்கிறீர்கள்? நான் இதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று ஆட்டோ ஓட்டுநர் கூற, அவள் தன் வீட்டில் இறக்கிவிடச் சொன்னாள். இதனால் திரும்பி வந்த பிறகு, தனது சகோதரி மற்றும் சகோதரரின் உதவியுடன், மித்ரா ஹில்ஸுக்கு அடுத்த ஒரு வெறிச்சோடிய இடத்தில் கணவரின் உடலை அடக்கம் செய்தார்.

பின்னர், பாதலிங்கயப்பள்ளிக்கு சென்றாள். அங்கு அவரது பிள்ளைகள் மற்றும் சைலு குடும்பத்தினர் சைலு குறித்து கேட்டதற்கு கவிதா முரண்பாடான பதில்களைக் கொடுத்தாள். மறுபுறம் சைலுவின் உடலை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர் கே.பி.எச்.பி. காவல் நிலையத்திற்குச் சென்று கவிதாவைப் பற்றி புகார் அளித்தார். திங்கட்கிழமை ஜோதி மற்றும் மல்லேஷை கைது செய்து விசாரித்தபோது இந்த விஷயம் தெரிய வந்தது. போலீசார் உடனடியாக பாத்தலிங்கயப்பள்ளிக்குச் சென்று, கவிதாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், தன்னை சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் கூறினார். ஆனால் சைலு குடும்பத்தினர் அவருக்கு எந்த நோயும் இல்லை என்று கூறினர். இதற்கிடையில், சைலு உடல் தோண்டி எடுக்கப்பட்டு, குகட்பள்ளி தாசில்தார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு விசாரனை செய்து வருகின்றனர்.


