சிகரெட் சூடு..அடி உதை : கணவனுக்கு மனைவி செய்த கொடூரம் - மிரள வைக்கும் வீடியோ!!

 
tn

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

fr

வேறு நபருடன் கள்ள உறவில் இருந்த மெஹர் ஜஹானை கணவர் மனன் ஜைதி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி மெஹர் ஜஹான், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். அத்துடன் சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார்




ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக அவரது  கணவர், கேமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார். இதனால் மனைவி தனக்கு செய்த கொடுமைகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம்  மனைவி மெஹர் ஜஹான்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.