யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்!!

 
tn

யுபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி  அகில இந்திய அளவில் 117வது இடத்தை பிடித்துள்ளார். 

tn

ஐஏஎஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது . ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்வில் முதல் நிலை , முதன்மை,  நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன.  933 காலி இடங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது . முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையில் இறுதி தேர்வான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் மே மாதங்களில் நடைபெற்றது.

tn

இந்நிலையில் 2022ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.  தேர்வர்கள் தங்கள் முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்;தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.  அகில இந்திய அளவில் முதல் இடத்தை இஷிதா கிஷோர் என்பவர் பிடித்துள்ளார்.

tn

2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன 180 ஐஏஎஸ்,  200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1022 இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றனர். யுபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி அகில இந்திய அளவில் 117 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.