மகா கும்ப மேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட என்ன காரணம்? - உ.பி முதலமைச்சர் விளக்கம்!

 
yogi

மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு உடைந்தது. அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். 
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். தை அமாவாசை என்பதால் பிரயாக்ராஜில் குவிந்த கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்தது. பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் உள்ளனர். 5 கோடி பேர் புனித நீராடினார்கள். திரிவேணி சங்கமம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில பக்தர்கள் தடுப்புகளை தாண்ட முயன்ற போது காயம் அடைந்தனர் என கூறினார்.