#BREAKING: மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் மாற்றம்!

 
SP Singh

மத்திய சட்டத்துறை அமைச்சர் மாற்றப்பட்ட நிலையில், சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகல் சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு முறை பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சி அடுத்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜூஜூ. இவர் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில், அவரது துறை மாற்றப்பட்டது. புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டார். கிரண் ரிஜூஜூ மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார்.  மத்திய சட்டத்துறை அமைச்சர் மாற்றப்பட்ட நிலையில், சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகல் மாற்றப்பட்டுள்ளார். சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.