தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு, புத்தாடை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று தமிழில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்தினை கூறியுள்ளார்.
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். pic.twitter.com/UjeNVBXsEH
— Amit Shah (@AmitShah) January 14, 2022
அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். pic.twitter.com/UjeNVBXsEH
— Amit Shah (@AmitShah) January 14, 2022
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
"தை பிறந்தால் வழி பிறக்கும்!
புதிய எண்ணத்-தை
புதிய செயல் திறத்-தை
நல்ல உடல் நலத்-தை
மாசிலா குடும்ப வளத்-தை
மகிழ்ச்சியான உள்ளத்-தை
குறைவில்லா செல்வத்-தை
பிறக்கும் தை-மகள்,
சிறப்பாய் கொடுக்கட்டும்.
மனமகிழ்ச்சியும், மனநிறைவும் மனையில் நிலைக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! " என்று குறிப்பிட்டு தனது வாழ்த்தினை உரித்தாக்கியுள்ளார்.