இந்தியா கூட்டணியை பார்த்து பாஜகவுக்கு நடுக்கம் - உத்தவ் தாக்கரே

 
udhav thackarey

இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெற்றது. 

INDIA

இந்த நிலையில், இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி எனவும் நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் அனைவரும் இந்திய குடும்பம் எனவும் கூறியுள்ளார்.   நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது எனவும் உத்தவ் தாக்கரே கூறினார்.