காஷ்மீர் என்கவுண்டர் - இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
kashmir

காஷிமீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீரின் பார்முலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பார்முலா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே அவர்கள் பதுங்கி இருப்பதாகவும், ஆயுதங்களுடன் உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசாரின் உதவியுடன் அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் பதுங்கி இருந்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் வேறு எங்காவது பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா எனவும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.