திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

 
manik saha

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான 31 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் மீண்டும் திரிபுராவில் அக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.