மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து - முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை!

 
Mamata Mamata

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

tt

மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை லோகோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மேற்கு வங்கத்தின் பனிஷ்தேவா பகுதியில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள், பேரிடர் மீட்புக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.