திருப்பதி - ஏப்ரல் மாதம் தரிசனம் செய்ய இன்று ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!!
திருப்பதி ஏழுமலையானை வருகிற ஏப்ரல் மாதம் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையிலான டோக்கன்கள் 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் வெளியாகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஊஞ்சல் சேவை, டோலோற்சவம், திருப்பாவாடை, அபிஷேகம், அஷ்டதல பாத பத்மராதன சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளுக்கும் இன்று டிக்கெட் அளிக்கப்படுகிறது.