இந்தியா கூட்டணிக்கான இலச்சினை இன்று வெளியாகிறது!

 
INDIA

இந்தியா கூட்டணிக்கான பிரத்யேக இலச்சினை இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் நடைபெற்று வருகிறது.

india

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கான பிரத்யேக இலச்சினை இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலச்சினை உருவாக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 இலச்சினையில் ஒன்று இன்று உறுதி செய்யப்பட்டு வெளிடப்படும் என கூறப்படுகிறது.