4 வயது சிறுமியின் உயிரை பறித்த ’ஷிகெல்லா பாக்டீரியா’

 
ச்

கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் மேலும் இரு குழந்தைகள் இப்பாதிப்பில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாசுபட்ட நீர், உணவு ஆகியவற்றின் மூலம் இத்தொற்று ஏற்படுவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடும் வயிற்றுப்போக்கு முதன்மையான அறிகுறி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகெல்லா என்பது செரிமான மண்டலத்தை, குறிப்பாக குடல்களைப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இந்த நோய் மிகவும் எளிதில் பரவக்கூடியது. அசுத்தமான உணவு அல்லது நீரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலமும் இது பரவக்கூடும். உதாரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் டயப்பரை மாற்றிய பிறகு ஒருவர் தன் கைகளைக் கழுவாவிட்டால், தொற்று ஏற்படுவதற்கான அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொள்வதற்கான அபாயம் ஏற்படலாம்.  நோய்த்தொற்றின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.