மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம்?

 
மோடி மோடி

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மோடி


தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.  காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில் கடைசி நேரத்தில் அவரது காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டமும் மாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.