ராணுவ வீரரின் மனைவி கையில் ரூ.5 கோடி, பணி நியமன ஆணையை வழங்கினார் தெலங்கானா முதல்வர்
Jun 22, 2020, 20:51 IST1592839303000
இந்தியா – சீனா எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு உட்பட இந்தியாவை சேர்ந்த ரானுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்திருப்பதற்காக பெருமைப்படுவதாகவும், ஒரே மகனை இழந்தது வேதனையாக இருப்பதாகவும் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா தெரிவித்தார்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சூர்யாபேட்டையில் உள்ள வீரமணடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கர்னல் மனைவி சந்தோஷியிடம் ரூ .5 கோடி நிதி மற்றும் குரூப் 1 பணிக்கான நியமனக் கடிதத்தை இன்று வழங்கினார்.