தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

 
Chandrasekara rau

தெலங்கான முதலமைச்சரும், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  மிசோரம் மற்றும் சத்தீஷ்கரில் கடந்த 07ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 07ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனிடையே 119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் நவம்பர் மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தெலங்கான முதலமைச்சரும், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் சந்திரசேகராவ் போட்டியிடுகிறார். இதன் காரணமாக அவர் இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தார். கஜ்வெல் தொகுதி ஏற்கனவே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்ற தொகுதியாகும். கமரெட்டி தொகுதி சந்திரசேகர ராவின் பூர்வீக மாவட்டத்தில் உள்ள தொகுதி என கூறப்படுகிறது.