தேர்தல் பாதுகாப்புக்கு 5,000 தமிழக போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் கடிதம்

 
police

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்புக்கு காவல்துறை பற்றாக்குறை காரணமாக 5000 தமிழக போலீசார் அனுப்புமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

police

தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழக காவல்துறையிடம் இருந்து 5000 காவலர்களை அனுப்புமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் .இதில் பாதுகாப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தெலுங்கானாவில் உள்ள காவலர்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்கள் பற்றாக்குறை காரணமாக எந்தெந்த வகையில் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை கேட்டு பெற முடியுமோ அதன் மூலம் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெலுங்கானா தலைமைச் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அடிப்படையில் தமிழக ஊர்க்காவல் படையினர் ஐயாயிரம் பேரை தேர்தலுக்காக அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வருகிற 27-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 5 நாட்கள் தேர்தல் பணிக்காக தேவைப்படுவதாக கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தெலுங்கானா காவல்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்திற்கு அருகில் இருக்கும் தெலுங்கானா மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் போடப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

police

இதனை அடுத்து தமிழக ஊர்க்காவல் படை டிஜிபி வன்னிய பெருமாள், தெலுங்கானா தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக முழுவதும் உள்ள மாநகரம் மற்றும் மாவட்டங்களில் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.தெலுங்கானா தேர்தலுக்கு பாதுகாப்பு பணி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனுப்புமாறு அந்த சுற்றறிக்கையில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அவர்களின் பட்டியல் குறித்து நாளை தலைமை இடத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் சுற்றறிக்கையில் கூறியுள்ளார். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் வரும் 27-ஆம் தேதி தெலுங்கானாவில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள செல்ல வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்