ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்

 
ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்

தொகுதி மறு வரையறை திட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image

ஒன்றிய அரசு 2026 மறு  சீரமைப்பு மறு வரைவு கொண்டு வருவதற்கு எல்லாம் முயற்சி எடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டி எடுத்து 31 தொகுதிகளாக குறைத்து விடும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் என்பது சட்டரீதியாக சரியாக இருக்கலாம் மத்திய அரசு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது ஆகவே மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாடு இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தியது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்ற தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக்கூடிய செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப் படாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திமுக எம்பிக்களின்  ஆர்ப்பாட்டத்திற்கு கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ‘குறைக்காதே குறைக்காதே தொகுதிகளை குறைக்காதே’ என முழக்கமிட்டப்படி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்பிக்கள் போராட்டத்தில்ல் ஈடுபட்டுள்ளன.