முன்கள பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 16,38,870 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,57,805 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 55,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள் பெரும்பங்காற்றி வருகின்றனர்.
ஆனால் மருத்துவர்களுக்கு பல மாநிலங்களில் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியே இதற்கு காரணம். இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பஞ்சாப், மகாராஷ்டிரா, திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.