ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா - ஜி20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர், டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது. அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை விருந்து அளிக்கிறார்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர், டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா வர இருந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னால் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க முடியவில்லை எனவும், தனக்கு பதிலாக துணை அதிபர் பங்கேற்பார் எனவும் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.