மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி அஞ்சலி!
மறைந்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி
செலுத்தினர். மன் மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி அவரது குடும்பத்தினறுக்கு ஆறுதல் கூறினார்.