இந்தியா கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - சஞ்சய் ராவத்

 
sanjay rawat

இந்தியா கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், கூட்டணியை யாரும் உடைக்க மாட்டார்கள் எனவும் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு இருக்கிறது.  இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூரு தொடர்ந்து மும்பையில் இன்று தொடங்க உள்ளது . மூன்றாவது கூட்டத்தில் புதிதாக இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

patna meeting

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா' கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்.  'இந்தியா' கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது. இந்தியா கூட்டணிக்குள்  எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனவே கூட்டணியை யாரும் உடைக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.