சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை13ல் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா..

 
வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா.. இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ‘ஆக்ஸியம் - 4’ குழு.. வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா.. இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ‘ஆக்ஸியம் - 4’ குழு..


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை முடித்துவிட்டு இந்திய  விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்ஸியம் 4 திட்டக்குழு வீரர்கள் ஜூலை 13ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர்.  

இஸ்ரோ,  நாசா,  ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள்  இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை  முன்னெடுத்தன. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன்,  ஹங்கேரி வீரர்  திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ  ஆகிய  நான்கு விண்வெளி வீரர்கள்,  கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.  அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்டில்  ஜூன் 25ம்தேதி  இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு  விண்ணில் பாய்ந்தனர். 

வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா.. இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ‘ஆக்ஸியம் - 4’ குழு..
 
சில நிமிடங்களுக்கு பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம், 28 மணி நேரம் சுற்றுப்பாதையில்  பயணித்து  ஜூன் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பயணத்தை தொடங்கிய போது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்’ என்று முழக்கமிட்டார்.  அத்துடன் ஏ.ஆர் ரஹ்மானின் பாடலை கேட்டபடி அவர் பயணத்தை தொடங்கினார்.  விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசிய சுபாஷ் சுக்லா, “இது தனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல..   விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் தொடக்கம்” என்றும் தெரிவித்தார்.

வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா.. இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ‘ஆக்ஸியம் - 4’ குழு..

ஆக்ஸியம் - 4 குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வார்கள். நால்வரும் சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில்,  இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.  அதன்படி  நுண் ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார்.  14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  ஜூலை 13ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புகின்றனர். ஜூலை 14ம் தேதி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீர்ர்களும் பூமியை வந்தடைவார்கள் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.