சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

 
sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.

sabarimala

இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை சி கோயில் நடை இன்று (மே14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.