பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்...பீதி அடையாதீர்கள் - ராகுல் காந்தி
![rahul](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/30fad9be24bdd92ba737112cbfd1c169.jpg)
பிரதமர் மோடி அவர்களே பீதி அடையாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. ஜார்கண்ட் மாநிலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி தன்னை OBC என்று அழைக்கிறார். ஆனால் பின்னர் அவர் குழப்பமடைந்து, நாட்டில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன - பணக்காரர் மற்றும் ஏழை என்று சொல்லத் தொடங்கினார். எனவே, இந்தியாவில் சாதிகள் உள்ளதா இல்லையா என்பதை முதலில் அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் 8% பழங்குடியினர், 15% தலித்துகள் மற்றும் 50% ஓபிசி மக்கள் உள்ளனர். அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாருடைய மக்கள் தொகை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள், பீதி அடையாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.