இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

 
rahul

UGCயின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST, OBC பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று, 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 இடஒதுக்கீட்டுப் பணியிடங்களில், 3,000 காலியாக உள்ளன, அவற்றில் 7.1% மட்டுமே தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பேராசிரியர்கள். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன. சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாதொழிப்பதற்கும் இது ஒரு முயற்சி.

இதுதான் ‘அடையாள அரசியலுக்கும்’ ‘உண்மையான நீதி’க்கும் உள்ள வித்தியாசம், இதுதான் பாஜகவின் குணாதிசயம். காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது - சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,  மேலும் இந்த காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.