மோடி கூடாது.. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மக்களவை சபாநாயகர் திறந்து வைக்கலாம்.. அசாதுதீன் ஓவைசி

 
புதிய நாடாளுமன்ற கட்டிடம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் திறந்து வைக்கலாம் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

டெல்லியில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால்  மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து  தற்போதுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி 65 ஆயிர் சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

ராகுல் காந்தி

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்து விடும்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் கட்டிட பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்ததால், வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல என்று தெரிவித்தார்.

லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், பிரதமர் ஏன் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்?. அவர் நிர்வாகத்தின் தலைவர்,  சட்டமன்றத்தின் தலைவர் அல்ல. நம்மிடம் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.  மக்களவை சபாநாயகர்  மற்றும் மாநிலங்களவை தலைவர் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கலாம். இது பணத்தில் உருவாக்கப்பட்டது,  தனது நண்பர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து ஸ்பான்சர் செய்தது (புதிய நாடாளுமுன்றம் கட்டப்பட்டது) போல் பிரதமர் ஏன் நடந்து கொள்கிறார்? என்று பதிவு செய்து இருந்தார்.