மிசோரம் மற்றும் சத்தீஸ்கருக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

 
tn

5 மாநிலத் தேர்தல்களில் முதலாவதாக, மிசோரமில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. 

tn

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  ஆளும் மிசோ தேசிய முன்னணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் , எதிர்க்கட்சிகளான மிசோரம் மக்களின் இயக்கம் காங்கிரஸ் கட்சி ஆகியவையும் போட்டியில் களமிறங்கியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.  174 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 8.57 லட்சம் வாக்காளர்கள் இன்று நிர்ணயம் செய்ய உள்ளனர்.  1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

இதே போல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  223 பேர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 25 பெண்களும் அடங்குவர்.