பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

 

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மூளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மூளை அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை கொரோனாவின் தீவிரத்தால்  மோசமானது. இதனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.