விக்ரம் லேண்டரை படம்பிடித்த பிரக்யான் ரோவர்..

 
விக்ரம் லேண்டரை படம்பிடித்த பிரக்யான் ரோவர்..


நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவரும்  சந்திரயான் 3-ன் ரோவர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்மான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர்.  

விக்ரம் லேண்டரை படம்பிடித்த பிரக்யான் ரோவர்..

இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது” என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்துவரும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை புகைப்படம் எடுத்திருக்கிறது. அதனை  இஸ்ரோ வெளியிட்டுள்ளது.