"குண்டு வீசினால் ஏவுகணை பாயும்"- பிரதமர் மோடி எச்சரிக்கை
பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அறிவிக்கிறார் என்றால் இந்திய நாட்டின் இறையாண்மையை மோடி அரசு அமெரிக்காவிடம் அடமானம் வைத்து விட்டது என்று பொருள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பேசிய பிரதமர் மோடி, “சிந்துநதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. எல்லைக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்தம் நிறுத்தப்படும். அப்ரேஷன் சிந்தூர் முடியவடையவில்லை. இயல்புநிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம். தாக்கினால் நாங்களும் தாக்குவோம். பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி பேசினால் பேசுவதற்கு தயார். அதுமட்டுமின்றி காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை, நாங்களும் எதிர்பார்க்கவில்லை. எல்லையில் பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும், பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் விமானப்படை தளங்களை தாக்கியதே முக்கிய திருப்புமுனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.


