ஐநா சபையில் பிரதமர் மோடி இன்று உரை!
Sep 26, 2020, 09:36 IST1601093194000
ஐநா பொது சபையின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்.
ஐ.நா பொதுசபையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மெய் நிகர் முறையில் இன்று நடைபெறுகிறது. 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக உலக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து அனுப்பியுள்ளனர். அந்த வீடியோக்கள் கூட்டத்தின் போது ஒளிப்பரப்படும்.
அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது. அதில் இந்தியாவின் வலிமை குறித்து உரை நிகழ்த்துகிறார் மோடி.கொரோனா பேரிடர் காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறை தாற்காலிகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த செப். 22-ம் தேதி தொடங்கிய பொது விவாதம் செப்.29 வரை நடைபெறவுள்ளது.