இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

 
modi

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.  
இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல்

 வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.