ராமர் இனி கொட்டகையில் இருக்க மாட்டார் - பிரதமர் மோடி பேச்சு!

 
modi

ராமர் இனி கொட்டகையில் இருக்க மாட்டார். கோயில் கருவறையினுள் இருப்பார் என பிரதமர் மோடி கூடியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பெரிய தட்டில் பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டை பூஜையில் அமர்ந்தார். மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் பொதுமக்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதணை காட்டி வழிபாடு செய்தார்.  

ramar

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம், ராமர் இந்தியாவின் சட்டம், ராமர் இந்தியாவின் கருத்து, ராமர் இந்தியாவின் மாண்பு, ராமர் இந்தியாவின் பெருமை, ராமரே தலைவர், ராமரே கொள்கை. ராமரே நித்தியமானவர்.  ராமர் போற்றப்படும்போது அதன் பலன்கள் நூற்றாண்டுகளுக்கு மட்டும் நீடிக்காது, அதன் விளைவு பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும். ராமர் இனி கொட்டகையில் இருக்க மாட்டார். கோயில் கருவறையினுள் இருப்பார்.  ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைத்துள்ளது.