‘ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை’ - பிரதமர் மோடி
Jan 16, 2024, 19:46 IST1705414608366
![modi](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/08d4e1bfd201ddaaee41850a0218b504.webp)
ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, “ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மத்திய அரசு முன்னுரிமை. சீர்திருத்தங்களால் நாட்டில் தற்போது வரி வசூல் சாதனை படைத்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வரி முறையில் பல சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசு தொடர்ந்து போத்மான வருவாய் பெறுவதில் மக்களுக்கு பங்குள்ளது. எந்த வகையில் வசூலித்தாலும் அத்தொகையை பல்வேறு விதமாக அரசு திருப்பித் தந்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.