வாரணாசியில் பிரதமர் மோடி பின்னடைவு
Jun 4, 2024, 09:41 IST1717474316971
![ft](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/729246ded4bf2a1ca5882cc29d3e994e.webp)
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதல் சுற்றில் 11,480 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 5257 வாக்குகளை பெற்றுள்ளார் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் வாரணாசி தொகுதியில் 2வது சுற்றிலும் பிரதமர் மோடி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி பிரதமர் மோடி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.