நாட்டின் வளர்ச்சிக்கான பாதையை கர்நாடக மக்கள் தந்துள்ளனர் - ப.சிதம்பரம் டுவீட்!

 
chidambaram

கர்நாடக தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த அம்மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20க்கும் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
 
இந்நிலையில், கர்நாடக தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த அம்மாநில மக்களுக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடக தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். கர்நாடகாவில் பண பலம், ஆள் பலம் என்ற இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கான பாதையை கர்நாடக மக்கள் தந்துள்ளனர். முன்னேறிய மாநிலமான கர்நாடகா மேலும் முன்னேற்றம் அடைந்து முதலிடம் பிடிக்கும். தேர்தல் பணியாற்றிய கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.