புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு உமர் அப்துல்லா வரவேற்பு!

 
Umar

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதற்கு தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா வரவேறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதற்கு தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா வரவேறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு தொடர்பான எதிர்வினைகளை ஒதுக்கித்தள்ளுகிறேன். இந்த கட்டிடம் வரவேற்கத்தக்கது. பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நன்றாகவே செயலாற்றி இருக்கிறது. ஆனால், அங்கே கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் புதிய, மேம்படுத்தப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்துக்கான தேவை பற்றி பேசி இருக்கிறார்கள். ஒரு போதும் இல்லாததைவிட தாமதமாக வருவது சிறப்புதான். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வசீகரமாக ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய மாநாட்டுக்கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்புவிழாவை புறக்கணிப்பது குறிப்பிடதக்கது.