மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது தேசிய மக்கள் கட்சி?

 
npp

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் மீண்டும் அந்த கட்சி அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. 

மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையிலான என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. மேகலாயாவில் தற்போதைய நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் பாஜக 08 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 11 இடன்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியகூறுகள் உருவாகி வருகின்றன.