மேகாலயாவில் தொங்கு சட்டசபை? - எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

 
Meghalaya

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன.

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலா 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.