வெவ்வேறு நபர்களுக்கு மாறுபட்ட வழிபாட்டு முறைகள் இருக்கலாம் ஆனால் இலக்கு ஒன்றுதான்.. மோகன் பகவத்

 
மதங்கள்

வெவ்வேறு நபர்களுக்கு மாறுபட்ட வழிபாட்டு முறைகள் இருக்கலாம் ஆனால் இலக்கு ஒன்றுதான் என்பதை உணர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

1900களில் பிரபலமான பாலிவுட் திரைப்பட எழுத்தாளரும் மற்றும் இயக்குனருமான இக்பால் துராணி, நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதத்தினை உருது மொழியாக்கம் செய்து இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் மோகன் பகவத் பேசுகையில், ஆன்மீக உண்மையை உணர மக்கள் மேற்கொண்ட பல்வேறு பாதைகள் அங்கீகரிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். 

மோகன் பகவத் இக்பால் துராணி

மோதல்கள் நிறைந்த உலகிற்கு இந்த புரிதல் தேவை என்று மோகன் பகவத் வலியுறுத்தினார். மேலும் மோகன் பகவத் கூறியதாவது: வெவ்வேறு நபர்களுக்கு மாறுபட்ட வழிபாட்டு முறைகள் இருக்கலாம் ஆனால் இலக்கு ஒன்றுதான் என்பதை உணர வேண்டும். ஒருவர் வெவ்வேறு  அர்த்தங்களில் சண்டையிடக் கூடாது. இந்த செய்தி அனைவருக்கும் பொருத்தமானது மற்றும் இந்தியா மற்றவர்களுக்கு வழங்க வேண்டிய ஒன்று. 

மோகன் பகவத்

அனைவருக்கும் (இறைவன்) வழிகாட்டுபவர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். பல்வேறு நபர்கள் வெவ்வேறு பாதைகளில் மலை உச்சியை அடையலாம். மற்றவர்கள் தவறான வழியை எடுத்துள்ளனர் என்று அவர்கள் நம்பினாலும், மேலே இருப்பவர் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி ஏறுவதை காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.