ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி - பிரதமர் மோடி வாழ்த்து
![மோடி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2242548c9efcf3f44cf0558981baa359.webp)
ஆந்திராவில் ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சுமார் 160 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் முதல்வர் அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சந்திரபாபு நாயுடுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.