மேற்கு வங்கத்துடன் தேசம் துணை நிற்கும்! – பிரதமர் மோடி உறுதி

 

மேற்கு வங்கத்துடன் தேசம் துணை நிற்கும்! – பிரதமர் மோடி உறுதி

ஆம்பன் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒட்டுமொத்த சேதமும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்துடன் தேசம் துணை நிற்கும்! – பிரதமர் மோடி உறுதி
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் காட்சிகளைப் பார்த்தோம். இது மிகவும் சவால் நிறைந்த நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்கு வங்கத்துக்கு துணையாக நிற்கும். மாநிலத்தின் மக்கள் நலம் பெற்று மீண்டும் வர பிரார்த்திக்கிறேன். இயல்புநிலைக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேசிய பேரிடர் மேலாண்மை படை புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. உயர் அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் நிலையை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். மேலும் மேற்கு வங்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆம்பன் புயல் பாதிப்பை மிகத் தீரத்துடன் எதிர்த்து செயலாற்றி வரும் ஒடிஷா மக்களுடன் என்னுடைய எண்ண ஓட்டங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரடைய களத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். நிலைமை மிக விரைவாக சீரடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.