குழந்தை பெற்ற மனைவி -காருக்கு ஆசைப்பட்ட கணவன்-அடுத்து குழந்தையை என்ன செஞ்சாங்க தெரியுமா?
கார் வாங்க ஆசைப்பட்ட ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தையை விற்ற கொடுமை நடந்துள்ளது
உத்தரபிரதேசத்தின் கான்பூர் கண்ணாஜில் ஒரு கணவன் மனைவி வசித்துவந்தனர் .அந்த மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஒரு ஆண் குழந்தையை பெற்றார் .அந்த தம்பதிகள் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டனர் .அனால் அந்த கணவனுக்கு வருமானம் போதவில்லை .ஆனால் நீண்ட நாட்களாக ஒரு கார் வாங்கி வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் .
அதனால் அந்த தம்பதிகள் கார் எப்படி வாங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தனர் .அப்போது குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த ஒரு பணக்கார தம்பதிகள் குழந்தை இல்லாதால் இவர்களின் குழந்தையை கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள் .அதை கேட்ட அந்த தம்பதிகள் அந்த குழந்தையை அவர்களிடம் 1.5 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டனர் .பிறகு அந்த பணத்தை கொண்டு ஒரு பழைய காரை விலைக்கு வாங்கி அவர்களின் கார் கனவை நிறைவேற்றிக்கொண்டனர் .இந்த விவகாரம் அந்த வீட்டிலிருந்த அவர்களில் அப்பா, அம்மாவுக்கு தெரிய வந்தது .உடனே அவர்கள் இந்த குழந்தையை விற்றதை போலீசில் போட்டு கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை விற்ற பெற்றோரையும் ,வாங்கிய குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த தொழிலதிபர் தம்பதிகளையும் கைது செய்தனர்.