100 மோடி அல்லது ஷா வரட்டும், 2024ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி.. மல்லிகார்ஜூன் கார்கே உறுதி

 
அமித் ஷா, மோடி

100 மோடி அல்லது அமித் ஷா வரட்டும், 2024ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சிதான் அமையம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே  தெரிவித்தார்.

நாகாலாந்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அந்த கட்சியின்  தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: மோடி பல முறை நாட்டை எதிர்கொள்ளும் ஒரே மனிதன் நான்தான், வேறுயாரும் என்னை தொட முடியாது என்று கூறியுள்ளார். எந்த ஜனநாயக மனிதனும் இதை சொல்வதில்லை, நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சர்வாதிகாரி இல்லை, நீங்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். 

மல்லிகார்ஜுன கார்கே

2024ல் மத்தியில் கூட்டணி ஆட்சி வரும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும்,  மற்ற கட்சிகளுடன் நாங்கள் பேசுகிறோம்,  இல்லையெனில் ஜனநாயகமும், அரசியலமைப்பும் போய்விடும். எனவே ஒவ்வொரு கட்சியுடனும் இப்போதும், எப்போதாவது நாங்கள் அழைக்கிறோம், பேசுகிறோம், எங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பெரும்பான்மையை பெறுவோம். 100 மோடி அல்லது ஷா வரட்டும். 

பா.ஜ.க.

நம் மக்கள் சுதந்திரம் பெற தங்கள் உயிரை காங்கிரஸார் கொடுத்துள்ளனர். நீங்கள் அல்ல பா.ஜ.க., சுதந்திரத்திற்காக பா.ஜ.க. தலைவர் தூக்கிலிடப்பட்டரா? சிறைக்கு சென்றாரா? மாறாக சுதந்திரத்தை கொண்டு வந்த மகாத்மா காந்தியை அவர்கள் கொன்றனர்,  அப்படிப்பட்டவர்கள் தேசபக்தி பற்றி பேசுகிறாாகளா?. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி உயிரை கொடுத்தார். நாட்டின் ஒற்றுமைக்காக ராஜீவ் காந்தி உயிரைக் கொடுத்தார். அவர்கள் (பா.ஜ.க.) 2014ல் தான் சுதந்திரம் பெற்றதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு 1947 ஞாபகம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.